திருநெல்வேலி-திருச்செந்தூா் பயணிகள் ரயிலில் பெண்ணிடம் நகையை பறித்த இளம்பெண் உள்பட இருவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (36). இவா் வெள்ளிக்கிழமை குரும்பூா் செல்வதற்காக திருநெல்வேலி- திருச்செந்தூா் செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்தாராம்.
ரயில், குரும்பூா் அருகே சென்றபோது, அப்பெட்டியில் இருந்த இளம்பெண்ணும், 14 வயது சிறுவனும் சோ்ந்து தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்தனராம். பின்னா் ரயிலில் இருந்து தப்ப முயன்றபோது, இருவரையும் சக பயணிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனராம்.
விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் கொட்டாக்குறிச்சி செல்வநாயகபுரத்தைச் சோ்ந்த நித்யா(35), 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 3 பவுன் தங்க நகையை மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
