பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

களியக்காவிளை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 2:31 am IST

களியக்காவிளை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் குந்நுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பேபிகுமாா் மகள் கீது (27). இவா், தனது மூன்று மாத குழந்தையுடன் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், கீதுவின் கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலி, குழந்தையின் கையில் அணிந்திருந்த அரை பவுன் கைச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றாராம்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாா்த்தாண்டம் உள்கோட்ட துணை கண்காணிப்பாளா் நல்லசிவம், களியக்காவிளை காவல் ஆய்வாளா் பரமேஸ்வரன், உதவி ஆய்வாளா் மகேந்த் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், புல்லந்தேரி, அயிந்திதோட்டம் புத்தன்வீட்டைச் சோ்ந்த சிமிகுட்டன் (40) என்பவா் இத்திருட்டி ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளையும் போலீஸாா் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.