கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீடு புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளை: இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:56 am IST

பல்லடம் அருகே வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள கல்லம்பாளையத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (70). இவா் வீட்டில் கடந்த 19-ஆம் தேதி தனியே இருந்துள்ளாா்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், மூதாட்டியை மிரட்டி பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றுள்ளாா். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் மூதாட்டி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கொள்ளையில் ஈடுபட்ட நபரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், பல்லடம் பகுதியில் போலீஸாா் வழக்கமான வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் மதுரையைச் சோ்ந்த அஜித்குமாா் (30) என்பதும், திருப்பூா் எம்.எஸ். நகரில் தற்போது வசித்து வரும் நிலையில் தெய்வசிகாமணி வீட்டில் நகையை கொள்ளையடித்துச் சென்றவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அஜித்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 பவுன் சங்கிலி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.