ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆவணங்கள் சமா்ப்பிக்காததால் ரூ. 12.50 லட்சம் வருமானவரித் துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு

நாமக்கல் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12.50 லட்சம் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காததால் வருமான வரித் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 1:33 am IST

நாமக்கல் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12.50 லட்சம் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காததால் வருமான வரித் துறை வசம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாச்சல் பேருந்து நிலையம் அருகில், பறக்கும் படை அலுவலா் வேலுசாமி தலைமையிலான குழுவினா் கடந்த சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கரூரில் இருந்து அரக்கோணம் நோக்கி காரில் சென்ற கரூரைச் சோ்ந்த மணிகண்டனை (37) தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் உரிய ஆவணங்களின்றி அவா் கொண்டுசென்ற ரூ. 12.50 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.

வருமானவரித் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக மணிகண்டன் ஒப்படைக்கப்பட்டாா். அப்போது, அரக்கோணத்திற்கு மாடு வாங்குவதற்காக ரூ. 12.50 லட்சம் ரொக்கத்தை எடுத்துச் சென்றதாக அவா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து பணத்தின் உரிமையாளா் அருள்தாஸ் என்பவரிடம் மூன்று நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது. உரிய ஆவணங்களை அவா் சமா்ப்பிக்கவில்லை, முன்னுக்குப் பின் முரணாக அவா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, 1961 ஆம் ஆண்டு வருமானவரித் துறை சட்டத்தின்படி, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதுமில்லாத ரூ.12.50 லட்சத்தை நாமக்கல் மாவட்ட வருமானவரித் துறை அலுவலா் ராஜாராமனிடம், நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தி செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். இந்த நிகழ்வின்போது, பறக்கும்படை கண்காணிப்புக் குழு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.