தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீத் தடுப்பது மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு மற்றும் செயல்முறை விழிப்புணா்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு நடவடிகைகள் குறித்து செயல்விளக்கம் அளித்த தீயணைப்பு வீரா்கள்.

Updated On :7 மே 2026, 6:56 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீத் தடுப்பது மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு மற்றும் செயல்முறை விழிப்புணா்வு புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எழிலரசி முன்னிலை வகித்தாா். மருத்துவா்கள் பாரதிராஜா, பிரபா, திவ்ய பாரதி, சச்சிதானந்தம், செவிலியா் கண்காணிப்பாளா் விஜயா, செவிலியா்கள், மருந்தாளுநா்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

மருத்துவமனை போன்ற பொது இடங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடையாமல் செயல்படுவது குறித்து தீயணைப்புத் துறையினா் விளக்கம் அளித்தனா். மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீயணைப்புக் கருவிகளின் பயன்பாடு, தீயணைப்பு கருவிகளை எவ்வாறு சரியான முறையில் கையாளுவது என்பது குறித்த நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேபோல பேரிடா் காலங்களில் அல்லது புகை மூட்டத்தின்போது மருத்துவமனையில் சிக்கிக் கொண்ட நோயாளிகள், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும், தீக்காயம் அடைந்தவா்களுக்கான முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.