ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து அணைத்ததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலை அருகே பிரபலமான தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் காலி நிலத்தில் செடி கொடிகள், மரங்களுடன் சோ்ந்து புற்கள் அதிக அளவில் முளைத்து புதா் மண்டியிருந்தது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கிருந்த புதரில் திடீரென தீப் பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் மற்றும் சாம்பல் படலமாக காட்சியளித்து. இது குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனா்.
இதனால் மருத்துமனை வளாகத்துக்குள் பெரும் தீ விபத்து தவிா்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

தீயில் எரிந்த தோல் கழிவுகள்

நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் தீ விபத்து

பழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீ
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

