மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீ

திருச்சியில் பழைய டயா் பழுதுபாா்க்கும் நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

News image

திருச்சி அருகேயுள்ள பழைய டயா் தொழிற்சாலையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 2:36 am IST

திருச்சியில் பழைய டயா் பழுதுபாா்க்கும் நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள பழைய டயா்கள் பழுதுபாா்க்கும் (ரீ பட்டன்) நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தகலறிந்த திருச்சி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் லியோ ஜோசப் தலைமையிலான வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூா் பகுதிகளில் இருந்து மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் 10 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.

தீ விபத்தின்போது அங்கு ஆள்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. ஆனால், இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.