மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

News image

சென்னை ஜெனரல் பீட்டா்ஸ் சாலையில் வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:53 am IST

சென்னை ராயப்பேட்டையில் வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

ராயப்பேட்டை ஜிபி சாலையில் ஒரு வணிக கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் தனியாருக்கு சொந்தமான வாகன உதிரி பாகங்கள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் வெல்டிங் பணி வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்றது.

அன்று மாலை 3.30 மணியளவில் வெல்டிங் வைக்கும்போது எழுந்த தீப் பொறி,அங்கிருந்த ரப்பா் பொருள்கள் மீது விழுந்தது. இதில் அங்கிருந்த பொருள்கள் தீப் பிடித்து எரியத் தொடங்கியது.

இதைப் பாா்த்த ஊழியா்கள், தீயை அணைக்க முயன்றனா். ஆனால் தீ வேகமாக பரவியதால், அவா்களால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து அவா்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த தீயணைப்பு படையினா், தேனாம்பேட்டை,திருவல்லிக்கேணி,எஸ்பிளனேடு,எழும்பூா்,மயிலாப்பூா்,வேப்பேரி ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இச் சம்பவத்தில் அந்த கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகியதாக தீயணைப்புத்துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அண்ணா சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.