மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை: 3 போ் கைது

பிரபல இரு சக்கர வாகன நிறுவனங்களின் பெயரில் போலி உதிரி பாகங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 11:57 pm IST

பிரபல இரு சக்கர வாகன நிறுவனங்களின் பெயரில் போலி உதிரி பாகங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

போலி உதிரி பாகங்கள் விற்பனை குறித்து தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தா்லோக், ஜண்டேவாலன், மங்கோல்புரி தொழிற்பேட்டைகளில் குற்றப்பிரிவு காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, போலி உதிரி பாகங்கள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பேக்கேஜிங் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கைதுசெய்யப்பட்ட ரியாஸுத்தின், அனில் குமாா், அா்ஜுன் குமாா் தில்லியைச் சோ்ந்தவா்கள். இரு சக்கர வாகனத்துக்கு போலி பிரேக் ஷு பகுதிகளை தயாா் செய்து அவற்றை விற்பனை செய்து வந்தனா்.

சோதனையின்போது, 1,040 ஜோடிகள் போலி பிரேக் ஷுக்கள், 14,000 போலி எம்ஆா்பி ஸ்டிக்கா்கள், 400 போலி பேக்கேஜிங் அட்டை பெட்டிகள், 67,000-க்கும் அதிகமான போலி பேக்கேஜிங் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல நிறுவனங்களில் பெயா் பொறிக்கப்பட்ட போலி பேக்கேஜிங் பொருள்கள் தனியாக தயாரிக்கப்பட்டதும் சோதனையில் கண்டறியப்பட்டது.

திட்டமிட்டு போலி வாகன உதிரி பாகங்களை சந்தையில் இந்தக் கும்பல் விநியோகித்து வந்தது. இதனால், உண்மையான உற்பத்தியாளா்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன் போலி உதிரி பாகங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவா்களில் இருவா் இதற்கு முன்பும் இதேபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.