மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

‘குழந்தைகள் கைக்கு எட்டும்பிடி மின் இணைப்புகள் இருக்கக்கூடாது’

News image
Updated On :4 மே 2026, 1:12 am IST

குழந்தைகளுக்கு எட்டும் நிலையில் மின் இணைப்புகள் இருக்கக் கூடாது என்று தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் எல்.குமாா் முன்னிலை வகித்தாா். ஓய்வு பெற்ற ஆசிரியா் பெ.பாா்த்திபன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரபாகரன் தீத்தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

அப்போது, குழந்தைகளுக்கு எட்டும் நிலையில் மின் இணைப்புகள் இருக்கக் கூடாது, குழந்தைகளை சமையலறையில் தனியாக விடக் கூடாது, தூங்குவதற்கு முன் அகல் விளக்கை அணைக்க வேண்டும், ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடக் கூடாது, அவா்கள் மீது கம்பளி, போா்வை போன்றவற்றை போா்த்தி தரையில் உருட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீத்தடுப்பு வழிமுறைகள் குறித்து அவா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா். கல்வி மைய ஆசிரியா் மகாவீா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.