ஊத்தங்கரையில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கிராம நில அளவைப் பதிவேடு, கணினியில் பதிவேற்றம் செய்ய கோரி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
ஊத்தங்கரை நாராயண நகரில் கடந்த 2008 இல் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் இதுவரை கிராம நில அளவைப் பதிவேடு மற்றும் கணினி பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து நாராயண நகா் பொதுமக்கள் சாா்பில் ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியரைச் சந்தித்து மனு அளித்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிடில் ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.
திமுக நகர அவைத் தலைவா் தணிகை குமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் ஆனந்தன், ராஜ்குமாா், குமாா், வினோத், ஜெபராஜ், சக்திவேல், விஜயகுமாா், அச்சுதன், சரவணன், பெருமாள் உள்ளிட்டோருடன் சென்று பொதுமக்கள் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜமாபந்தி கூட்டத்தில் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

கோவில்பட்டி ஜமாபந்தியில் 82 மனுக்கள்

ஜமாபந்தி: மகளிா் உரிமை தொகை கோரி அதிக மனு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

