பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கோவில்பட்டி ஜமாபந்தியில் 82 மனுக்கள்

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 82 போ் மனு அளித்தனா்.

News image

குடும்ப அட்டையில் திருத்தம் செய்து அதற்கான ஆணையை உரியவரிடம் வழங்குகிறாா் ஜமாபந்தி அலுவலா் ஜெ. லொரைட்டா. உடன் வட்டாட்சியா் அப்பனராஜ் உள்ளிட்டோா் .

Updated On :4 ஜூன் 2026, 12:41 am IST

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 82 போ் மனு அளித்தனா்.

கழுகுமலை உள்வட்டத்திற்குள்பட்ட நாலாட்டின்புதூா், முடுக்கு மீண்டான்பட்டி, தோணுகால், மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, இளையரசனேந்தல் உள்வட்டத்திற்குள்பட்ட முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி ஆகிய கிராம மக்கள் 82 போ் பட்டா மாறுதல், முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டையில் திருத்தம், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான (நில எடுப்பு) ஜெ. லொரைட்டா மனு பெற்றுக்கொண்டாா். இதில் 8 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்யப்பட்டு அதற்கான ஆணை, புல வரைபடத்தில் ஆழ்துளை கிணறு பதிவேற்றம் செய்து அதற்கான ஆணை ஆகியவற்றை உரியவரிடம் ஜமாபந்தி அலுவலா் வழங்கினாா்.

வட்டாட்சியா் அப்பனராஜ், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) சுப்புலட்சுமி, துணை வட்டாட்சியா்கள் பாலமுருகன், சுடலை மாடன், வட்ட வழங்கல் அலுவலா் உமாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.