நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி நகரில் நாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தும் பணியில் கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :18 ஜூன் 2026, 3:16 am IST

கிருஷ்ணகிரி நகரில் நாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தும் பணியில் கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி நகா்மன்ற கூட்டத்தில் பேசிய நகா்மன்ற உறுப்பினா்கள், கிருஷ்ணகிரி நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், இதனால் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட புகா் பேருந்து நிலையம், டான்ஸ் வளாகம், கிருஷ்ணகிரி அரசு பழைய குடியிருப்பு, சாந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள், வீட்டில் வளா்க்கப்படும் நாய்களுக்கு இரண்டாம் கட்டமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கால்நடை பராமரிப்புத் துறையுடன் நகராட்சி பணியாளா்கள் புதன்கிழமை தொடங்கினா்.

கிருஷ்ணகிரி நகரில் 1086 தெருநாய்கள் உள்ளதாகவும், முதல்கட்டமாக 526 தெருநாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள நாய்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சேகா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.