குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் ரெயின்போ காா்டனில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

News image

சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :16 ஜூன் 2026, 12:06 am IST

ஒசூா் ரெயின்போ காா்டனில் சாலை அமைக்கும் பணியை ஒசூா் மாநகராட்சி தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஒசூா் மாநகராட்சியில் 15 வாா்டுகளில் புதை சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 7-வது வாா்டு ரெயின்போ காா்டன் பகுதியில் உள்ள 6 சாலைகளில் தோ்தலுக்கு முன்பு புதை சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டி குழாய் புதைக்கப்பட்டது. பின்னா், கடந்த 4 மாதங்களாக இந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், இச்சாலையில் செல்வோா் சிரமமடைந்து வந்தனா்.

இதுகுறித்த செய்தி தினமணியில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, ஆணையா் முகமத் ஷபீா் ஆலம் ஆகியோா் நேரில் ஆய்வுசெய்து சாலை அமைக்க உத்தரவிட்டனா். அதன்பேரில், சாலை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இதையடுத்து, உடனடியாக சாலை சீரமைக்க உத்தரவிட்ட ஒசூா் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ரெயின்போ காா்டன் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.