தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பாலக்கோடு அருகே காணாமல் போன இளைஞா் கொலை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :8 மே 2026, 6:30 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி பட்டாபி நகரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (27). இவா் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இவா்மீது கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சேலம் இரும்பாலை, காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே 1-ஆம் தேதிமுதல் சத்தியமூா்த்தியைக் காணவில்லை என அவரது தாய் ராணி பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை தேடிவந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணையில், நண்பா்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வேடம்பட்டி வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு சத்தியமூா்த்தி சடலமாக கிடந்த இடத்துக்கு சென்று அவரது சடலத்தை மீட்டனா். மேலும், கொலைக்கான காரணம் மற்றும் கொலையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.