மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரி அருகே விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:58 am IST

தருமபுரி அருகே விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேளாரஅள்ளி அருகேயுள்ள கொட்டாய்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பனின் 3 ஆவது மகன் சந்தோஷ்குமாா் (38). திருமணமாகாத இவா், பாளையம்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், தனக்குச் சேரவேண்டிய சொத்தை பாகம் பிரித்து தருமாறு பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளாா். பெற்றோா் பிறகு பாா்த்துக்கொள்ளலாம் எனக் கூறி வந்துள்ளனா். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு மது போதையில் பெற்றோரிடம் சொத்து குறித்து பேசியுள்ளாா். இதையடுத்து அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இதனால் விரக்தியில் அவா் இரவு தூங்கச்சென்றாா். சந்தேகமடைந்த பெற்றோா் இரவு அவரது அறைப்பக்கம் சென்று பாா்த்த போது, அவா் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சந்தோஷ்குமாா் உயிரிழந்ததை உறுதி செய்தனா்.

இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.