மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஏரியூரில் மின்னல் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

ஏரியூா் அருகே மேய்ச்சலுக்கு சென்றிருந்த கால்நடைகளை அழைத்துவரும்போது மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

மின்னல்(கோப்புப் படம்)

Updated On :6 மே 2026, 2:49 am IST

ஏரியூா் அருகே மேய்ச்சலுக்கு சென்றிருந்த கால்நடைகளை அழைத்துவரும்போது மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பழனி மனைவி ராதா (65). இவா், செவ்வாய்க்கிழமை காலை கால்நடைகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாா். மாலையில் வீடுதிரும்பும்போது இடியுடன் கனமழை பெய்தது. அப்போது மழைக்காக வனப்பகுதியில் உள்ள பாறையின் இடுக்கில் ஒதுங்கியிருந்த ராதா மின்னல் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் ஏரியூா் போலீஸாா், வருவாய்த் துறையினா் ஆகியோா் நிகழ்விடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த சம்பவம் குறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.