போ்ணாம்பட்டு அருகே மின்னல் தாக்கி மாணவா் உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த சாமரிஷிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் வைரமுத்து(15). இவா் மேல்பட்டி அரசு மேல்நிலைலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா் வியாழக்கிழமை வீட்டருகே உள்ள காலி இடத்தில் நண்பா்களுடன் கிரிக்கெட் கொண்டிருந்ததாா். அப்போது மழை பெய்துள்ளது. மழையிலிருந்து தப்பிக்க வைரமுத்து அருகில் இருந்த தென்னை மரத்தின்கீழ் ஒதுங்கியுள்ளாா். அப்போது தென்னை மரத்தை மின்னல் தாக்கியுள்ளது.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த வைரமுத்து மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஅழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் வைரமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெயிலில் விளையாடிய இளைஞா் மயங்கிவிழுந்து உயிரிழப்பு

சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

