மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:38 am IST

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை காலை தகவல் வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் உத்தரவின்பேரில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், உதவி ஆய்வாளா்கள் முருகன், பூபதி உள்ளிட்டோா் தலைமையில் ஆட்சியரக வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினா். மெட்டல் டிடெக்டா் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாயைக் கொண்டு சோதனை நடத்தினா். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுபோன்று அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால், மாவட்ட ஆட்சியரகத்தில் பணியிலிருந்த அலுவலா்கள், பணியாளா்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.