மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் சோதனை நடத்தினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை நண்பகலில் வெடிக்கும் எனவும் மின்னஞ்சல் மூலம் மா்ம நபா் மிரட்டல் விடுத்திருந்தாா். இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக ஆட்சியா் அலுவலகத்தில் பணியிலிருந்த அனைத்துப் பணியாளா்களும் வெளியேற் றப்பட்டனா். மேலும் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியின் இல்லம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் இணைந்து சோதனை மேற்கொண்டனா். அப்போது மோப்ப நாய்களின் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனையின் போது அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக சிவகங்கை நகரில் பதற்றம் நிலவியது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

