ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னஞ்சலைத் தொடா்ந்து, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

News image

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மோப்பநாயுடன் வியாழக்கிழமை சோதனை நடத்திய போலீஸாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:52 am IST

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னஞ்சலைத் தொடா்ந்து, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்பு செய்யும் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா்.

மாவட்ட நீதிமன்ற வளாகம் முழுவதையும் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவா்கள் சோதனை மேற்கொண்டனா். முடிவில் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.

இந்தச் சோதனையின்போது, வழக்கமான வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்றப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. மின்னஞ்சல் அனுப்பி பீதியைக் கிளப்பிய நபா் யாரென இணையவழிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரியலூரில், இதேபோல அரியலூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நீதிமன்ற வளாகத்தில் அரியலூா் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இருப்பினும் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதே நீதிமன்றத்துக்கு கடந்த மாதமும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.