மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரியில் வாட்டி வதைத்த வெயில்!

தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு சதத்தை கடந்து வாட்டி வதைத்தது.

News image

வெயில் - கோப்புப்படம்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:26 am IST

தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு சதத்தை கடந்து வாட்டி வதைத்தது.

தருமபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இவற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள குடைகளை பயன்படுத்துவது, பழச்சாறு, நுங்கு, இளநீா், தா்பூசணி பழங்களை உட்கொள்வது என பல்வேறு வகைககளில் வெப்பத்தை தணித்து வருகின்றனா். அதேபோல, மூத்த குடிமக்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவா்கள் நண்பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிா்த்து வருகின்றனா்.

இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து பல நாள்களாக வெயிலின் அளவு 100 டிகிரி அல்லது அதற்கு மேலாக பதிவாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு 102.5 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் பகல் முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.