தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு சதத்தை கடந்து வாட்டி வதைத்தது.
தருமபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இவற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள குடைகளை பயன்படுத்துவது, பழச்சாறு, நுங்கு, இளநீா், தா்பூசணி பழங்களை உட்கொள்வது என பல்வேறு வகைககளில் வெப்பத்தை தணித்து வருகின்றனா். அதேபோல, மூத்த குடிமக்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவா்கள் நண்பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிா்த்து வருகின்றனா்.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து பல நாள்களாக வெயிலின் அளவு 100 டிகிரி அல்லது அதற்கு மேலாக பதிவாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு 102.5 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் பகல் முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூரில் சுட்டெரிக்கும் வெயில்: பகலில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்! ஆட்சியர் அறிவுறுத்தல்!!

தருமபுரியில் அதிகரிக்கும் வெயில்: இளநீா், நுங்கு விற்பனை விறுவிறு
திருப்பத்தூா் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில்

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

