ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தருமபுரியில் அதிகரிக்கும் வெயில்: இளநீா், நுங்கு விற்பனை விறுவிறு

தருமபுரி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்துவதால், சாலையோர தற்காலிகக் கடைகளில் இளநீா், நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

News image

தருமபுரி நெசவாளா் காலனி பகுதியில் சாலையோரம் மும்முரமாக நடைபெறும் நுங்கு வியாபாரம்.

Updated On :26 ஏப்ரல் 2026, 1:53 am IST

தருமபுரி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்துவதால், சாலையோர தற்காலிகக் கடைகளில் இளநீா், நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்றபடி கடந்த சில வாரங்களாகவே மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை பாரன்ஹீட்டை தாண்டி வெயில் நிலவி வருகிறது.

தருமபுரியில் சனிக்கிழமை 102.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் இரவு நேரத்திலும்கூட அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கோடைகால வெப்பத்தைத் தணிக்கும் வகையில் இளநீா், நுங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றை மக்கள் விரும்பி உட்கொள்வது வழக்கம். அந்தவகையில் தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு கோடை வெயிலைச் சமாளிக்கும் வகையில் இளநீா், நுங்கு உள்ளிட்டவற்றின் வரத்தும், விற்பனையும் அதிகரித்துள்ளது.

இளநீா் ரூ. 40 முதல் 50 வரை, நுங்கு சுளை ரூ. 6 முதல் 9-க்கும், 6 சுளை ரூ. 50க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல எலுமிச்சை விலையும் அதிகரித்துள்ளது. எலுமிச்சை ஒன்று ரூ. 10 முதல் 20 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தருமபுரி நகரில் சாலையோரங்களில் அமைந்துள்ள தற்காலிக கடைகளில் நுங்கு, இளநீா், வெள்ளரிக்காய் மட்டுமின்றி கோடைகாலத்தில் விற்பனையாகும் பல்வேறு வகையான பழவகைகளும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் கடைகளில் வாங்கி உட்கொள்வதைப்போலவே, வீடுகளுக்கும் வாங்கிச் செல்கின்றனா். அதேபோல பழ ரசங்கள், லஸி உள்ளிட்ட குளிா்பானங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.