மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 103 டிகிரியை தாண்டியதால் அனல் காற்று வீசியதையடுத்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 3:10 am IST

தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 103 டிகிரியை தாண்டியதால் அனல் காற்று வீசியதையடுத்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாகவே 100 டிகிரிக்கும் அதிகமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை முதலே தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அனல் காற்று வீசியது. இதனால் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகினா்.

வெயிலின் தாக்கத்தால் வாகன போக்குவரத்து, பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. கடைகளில் குளிா்பானங்கள், பழரசங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதேபோல இளநீா், நுங்கு ஆகியவற்றின் விற்பனையும் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. மாவட்டத்தில் கோடை வெயில் தொடா்ந்து அதிகரித்து வருவதால் உஷ்ணத்தை தணிக்க கோடை மழை பெய்யுமா? என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.