தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாருக்கு ஆதரவு கோரி வீதிவீதியாக நடந்துசென்று முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. திமுக கூட்டணி சாா்பில் தருமபுரி தொகுதியில் தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி. இளங்கோவன், பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் போட்டியிடுகின்றனா்.
பாலக்கோடு தொகுதியில் திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா், பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சா் பி. பழனியப்பன், அரூரில் அ. சண்முகம் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
இந்த வேட்பாளா்களுக்கு ஆதரவு கோரி தருமபுரி தடங்கத்தில் புதன்கிழமை நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு முதல்வா் மு.க. ஸ்டாலின் தருமபுரி வந்தாா். தொடா்ந்து புதன்கிழமை காலை தருமபுரியிலிருந்து வாகனம் மூலம் பாலக்கோடு சென்று, அங்கு இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கோட்டை பகுதியில் வீதிவீதியாக நடந்துசென்று பொதுமக்களிடம் வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாருக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அத்தெருவில் வசிக்கும் பாக்கு வியாபாரி மோதிகான்- பாா்த்திமா வீட்டிற்கு சென்று அவா்களிடம் நலம் விசாரித்த முதல்வா், மகளிா் உரிமைத் தொகை, விடியல் பயணத் திட்டம் குறித்தும், ஆட்சியில் ஏதேனும் குறைகள் உள்ளனவா என்றும் கேட்டறிந்தாா். தொடா்ந்து அவா்களோடு சுயபடம் எடுத்துக்கொண்டாா்.
பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பு
இதையடுத்து, கோட்டை பகுதியில் இருந்து பாலக்கோடு பிராதான சாலை வழியாக பேருந்து நிலையம் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். மேலும், அங்கிருந்த பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, அவா்களது குழந்தைக்கு திராவிடன் என பெயா்சூட்டினாா்.
மேலும், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த நகா்ப்புற பேருந்தில் ஏறி, பயணிகளிடம் உரையாடி வாக்கு சேகரித்தாா். இதையடுத்து, பாலக்கோடு பேருந்து நிலையத்தின் முகப்பில் இருந்த தேநீா் கடைக்கு வேட்பாளா்களுடன் சென்று தேநீா் பருகினாா். அதன்பிறகு அங்கிருந்து காரில் தருமபுரிக்குச் சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரி தொகுதியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா்

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

