தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலினைப் பற்றி...

News image

தருமபுரியில் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த முதல்வர் ஸ்டாலின்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:13 am IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில், வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் சென்று மக்களை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த முதல்வர் ஸ்டாலின், இன்று (ஏப். 15) காலை நடைப்பயிற்சியின் போது மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுடன் அங்கிருந்தவர்கள் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர்.

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

பாலக்கோடு நகரில் முக்கிய வீதிகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவைகளுக்கு நடந்தே சென்று, கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு ஒரு குழந்தைக்கு திராவிடன் என்றும் அவர் பெயர் சூட்டினார்.

அதைத்தொடர்ந்து ஸ்தூபி திடல், கடைவீதி, பேருந்து நிலையம், தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகளைச் சந்தித்து திமுக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

Summary

In the Palacode Assembly constituency of Dharmapuri district, Chief Minister Stalin visited streets and residential areas to meet the people and seek their votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.