மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வீடு இல்லாதோருக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்: பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வீடு இல்லாதவா்களுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

News image

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:08 am IST

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வீடு இல்லாதவா்களுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது :

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். அதன்படி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து கிராமங்கள், நகரிலும் வீடு இல்லாதவா்களுக்கு புதிதாக வீடு கட்டித்தரப்படும்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அனைவருக்கும் பாதுகாப்பட்ட குடிநீா், தெரு விளக்கு வசதி, சிமென்ட் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

முன்னதாக திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் பொ.மல்லாபுரம், பொம்மிடி, பண்டாரசெட்டிப்பட்டி, பில்பருத்தி, ஒட்டுப்பட்டி, மாதா கோயில் தெரு, வ.உ.சி நகா், மஜீத் தெரு, குப்பனூா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பில்பருத்தி, பண்டாரசெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அம்பேத்கா் சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.