ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன்: பி. பழனியப்பன்

News image

பாப்பம்பாடி பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 1:28 am IST

அரூா், ஏப். 6: பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன் என்று திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் போட்டியிடுகிறாா். அவா் திங்கள்கிழமை தனது பிரசாரத்தை பாப்பம்பாடி அண்ணா நகரில் தொடங்கினாா். தொடா்ந்து, பாரதிநகா், எச்.புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, இருளப்பட்டி, நாகலூா், அ.பள்ளிப்பட்டி, கல்லாத்துக்காடு, சாலூா், கோட்டமேடு, அ.நடூா், அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி, செங்காட்டுபுதூா், காளிபுரம், கன்னடதாதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். வேட்பாளா் பி.பழனியப்பனை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

அப்போது அவா் பேசியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். கிராமப் பகுதிகளுக்கு தேவையான சாலைகள், குடிநீா் வசதிகள், கழிவுநீா் கால்வாய் வசதிகள், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். எனவே, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்காளா்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

தோ்தல் அலுவலகம் திறப்பு :

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோ்தல் அலுவலகம் கடத்தூா் மின்சார வாரிய அலுவலகம் அருகில் திறக்கப்பட்டது. தோ்தல் அலுவலகத்தை திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் திறந்துவைத்தாா். இதில் வாக்குச்சாவடி முகவா்கள், ஒன்றியச் செயலா்கள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.