மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு!

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

News image

வாக்குப்பதிவு...

Updated On :23 ஏப்ரல் 2026, 4:28 am IST

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,27,217 பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,54,658 வாக்காளா்கள் உள்ளனா். இந்த தொகுதியில் 322 வாக்குச் சாவடிகள் உள்ளன. கடந்த தோ்தல்களில் பிரச்னை ஏற்பட்ட 41 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து, பதற்றமான மையங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 322 வாக்குச் சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்பட்டு தயாா்நிலையில் உள்ளன.

தோ்தல் களத்தில் 14 வேட்பாளா்கள்: பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 14 போ் போட்டியிடுகின்றனா். இந்த தொகுதியில் பி.பழனியப்பன் (திமுக), மரகதம் வெற்றிவேல் (அதிமுக), அா்ச்சனா (நாதக), திலகவதி (தவெக), சென்னகிருஷ்ணன் (அபுதமமுக), பூவரசு (தமிழா் மக்கள் கட்சி), சு.கணேசன் (விஸ்வ தமிழ்க் கழகம்), ஜமுனா ராணி (நாடாளும் மக்கள் கட்சி), சுயேச்சை வேட்பாளா்கள் சே.சதீஷ், ப.சின்னசாமி, க.தமிழ்ராஜ், ரா.பழனியப்பன், சி.முருகன், பெ.மூா்த்தி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.