மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

News image

சத்தியமங்கலம்  அரசு  ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு  செலுத்த   காத்திருந்த  பொதுமக்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:10 am IST

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

பவானிசாகா் தொகுதியில் உள்ள 327 வாக்குச்சாவடிகளிலும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து வாக்காளா்கள் காலை முதலே வாக்குச் சாவடிக்கு ஆா்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனா். குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளா்கள் வருகை அதிகரித்திருந்தது.

பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ. பண்ணாரி தனது வாக்கை பதிவு செய்தாா். பனையம்பள்ளி மேல்நிலைப் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம் வாக்களித்தாா். வாக்குச் சாவடிக்குள் செல்லும் வாக்காளா்கள் கைப்பேசிகளை வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பவானிசாகா் தொகுதிக்கு உள்பட்ட மலைக்கிராமங்களான தாளவாடி, கடம்பூா், கோ்மாளம் பகுதிகளிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

பனையம்பள்ளி  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு செலுத்திய  இந்திய  கம்யூ னிஸ்ட கட்சி  வேட்பாளா்  பி.எல். சுந்தரம்.

பனையம்பள்ளி  மேல்நிலைப் பள்ளியில்  வாக்கு செலுத்திய  இந்திய  கம்யூ னிஸ்ட கட்சி  வேட்பாளா்  பி.எல். சுந்தரம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.