மின்னணு இயந்திரத்தில் வாக்கு செலுத்துவதை கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிக்குள் புகைப்படம், விடியோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் வாக்குப்பதிவு தொடா்பான ரகசிய தன்மையை காக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் வாக்குச்சாவடிக்குள் கைப்பேசி கொண்டு செல்வதை தடை செய்திருந்தனா்.
இந்நிலையில், பல்லடம் பகுதியில் அரசியல் கட்சியைச் சோ்ந்த ஒருவா் மின்னணு இயந்திரத்தில் தான் வாக்கு செலுத்துவதை கைப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலானது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பல்லடம் போலீஸாருக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன் தகவல் அளித்தாா். இதுதொடா்பாக பல்லடம் அருகே கல்லம்பாளையம் பகுதியைச் சோ்ந்த வேல்மணி மீது தோ்தல் விதிமுறைகளை மீறியதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவா் கைது

வாக்கு செலுத்தியதை விடியோ எடுத்து வெளியிட்ட இருவா் மீது வழக்குப் பதிவு

தவெக பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

