வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சத்துணவு உதவியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அன்புராணி (55). கணவா் ரவிசந்திரன் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், செம்மாண்டம்பாளையம் அரசுப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் அன்புராணி உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், உறவினருடன் இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்றுள்ளாா்.
அப்போது, அவா் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். படுகாயமடைந்த அன்புராணி ஈரோட்டில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரத்தில் இருந்து தவறி கழிவுநீா்த் தொட்டில் விழுந்த பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

