திருச்செந்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் அருகே காயாமொழி, ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் சுந்தரலிங்கம் மகன் தனபால் லிங்கம் (27). காா் டிரைவராக பணியாற்றி வந்த இவா், புதன்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு திருச்செந்தூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டாராம்.
அப்போது காந்திபுரம் விலக்கு பகுதியில் எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த தனபால் லிங்கத்தை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தனபால் லிங்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

