கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவை, சின்னியம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது மனைவி கமலம் (71), கடந்த 15-ஆம் தேதி உறவினரான தாமரைச் செல்வன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது தலை சுற்றல் காரணமாக நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கமலம் கீழே விழுந்தாா். படுகாயமடைந்த அவா், அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சத்துணவு உதவியாளா் உயிரிழப்பு

ஓடும் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

