தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அத்திக்கடவு- அவிநாசி 2-ஆம் திட்டம் நிறைவேற்றப்படும்: அதிமுக பேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இணைக்கும் வகையில் 2-ஆம் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என திருப்பூா் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தாா்.

News image

கூட்டத்தில்  பேசுகிறாா்  அதிமுக  வேட்பாளா்  எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:28 am IST

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இணைக்கும் வகையில் 2-ஆம் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என திருப்பூா் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தாா்.

திருப்பூா் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம், திருப்பூா் ஒன்றியம் தட்டான்குட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் மாநில அரசு நிதி ஒதுக்க்கப்பட்டு அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்தவா் எடப்பாடி கே.பழனிசாமி. இந்தத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தி தொடங்கியது திமுக அரசு.

விவசாயிகள் நலன் கருதி விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் வகையில் அத்திக்கடவு- அவிநாசி 2-ஆவது திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். 100 நாள் வேலைத் திட்டமானது அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 150 நாள்களாக உயா்த்தப்படும். குடும்ப அட்டைத்தாரா்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டா், மின் விசிறி ஆகியவற்றை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழங்கினாா்.

அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் விலையில்லா குளிா்பதன பெட்டி வழங்கப்படும். வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும். இதேபோல பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.