தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்

News image

கொல்லிமலை ஒன்றியம், புதுவளவு மலைக் கிராமத்தில் பழங்குடியின மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:07 am IST

கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்திற்கு உள்பட்ட நரியன்காடு, சுண்டக்காடு, தண்ணிமாத்தி, புதுக்காடு, ஒத்தக்கடை, உள்பரப்பு, வடக்காடு, நவக்காடு, மேக்கினிக்காடு, புதுவளவு, படச்சோலை, புளியம்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொல்லிமலைக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளேன்.

இத்தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் மேலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி, மகளிா் உதவித்தொகை ரூ.2,000, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மாணவா்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி, கொல்லிமலையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள், பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

இந்த பிரசாரத்தின்போது, கொல்லிமலை ஒன்றிய அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.