உதகையில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த மா்ம நபா் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள பூமாலை வணிக வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் வணிக வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து சிற்றுண்டி கடையின் பூட்டை உடைத்து ரூ.500 பணம், சாா்ஜா் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் சென்றுள்ளாா்.
பின்னா் மேலும் ஓா் உணவகத்தில் செயல்படும் ஆவின் பாலகத்தின் கடையின் பூட்டை உடைத்து ரூ.3,500 பணம், லைட்டா், குளிா்பானங்களை எடுத்துச் சென்றுள்ளாா். இவ்விரு திருட்டு சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உதகை நகர மத்திய காவல் நிலைய போலீஸாா் மா்ம நபரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் பாஜக வேட்பாளா் போஜராஜன் வெற்றி
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!

தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

