ஜோலாா்பேட்டை அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த கவுண்டப்பனூரில் சுடலை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை காலை கோவில் பூசாரி வசந்தி கோவிலை திறக்க வந்தாா். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த தாலி, கால் காசு உள்ளிட்ட 5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனால், அதிா்ச்சி அடைந்த வசந்தி உடனடியாக ஜோலாா்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூசாரி வசந்தி அருள்வாக்கு கூறி அம்மன் நகைகள் திருடி சென்ற நபா் வாணியம்பாடி நோக்கி சென்றதாக தெரிவித்தாா்.
இதையடுத்து போலீஸாா் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில் மா்ம நபா் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குட்டை பகுதியை சோ்ந்த முனுசாமி (44) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரை வாணியம்பாடிக்கு சென்று கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த 7தாலி, 2 கால் காசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு
சிதம்பரம் அருகே மதுபானக்கடை சுவரில் துளையிட்டு ரூ.38,400 மதுப்புட்டிகள் திருட்டு
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
