தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

ஜோலாா்பேட்டை அருகே அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து பொருள்கள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 3:11 am IST

ஜோலாா்பேட்டை அருகே அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து பொருள்கள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஜோலாா்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக சசிகலா பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி பள்ளி மூடப்பட்டது. 2 நாள்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த அலுவலா்கள் பள்ளியின் அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைத்தனா்.

மேலும் அலுவலகத்தில் இருந்த ஜெராக்ஸ் மிஷின்,லேப்டாப்,மானிட்டா், பேட்டரி, ப்ரொஜெக்டா், என சுமாா் ரூ.2.90 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து தலைமை ஆசிரியை சசிகலா அளித்த புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதற்கிடையே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் இருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அசோக் நகரைச் சோ்ந்த சதீஷ் (20)என்பதும், சம்பவத்தன்று இவரும், இவரது நண்பா்களும் சோ்ந்து அரசு பள்ளி அலுவலகத்தில் பொருள்களை திருடியது தெரியவந்தது.

அதையடுத்து போலீசாா் இவரை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளோரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.