மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உதகையில் பாஜக வேட்பாளா் போஜராஜன் வெற்றி

News image

தோ்தல் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழ் பெற்ற உதகை தொகுதி பாஜக வேட்பாளா் போஜராஜன்.

Updated On :5 மே 2026, 3:06 am IST

நீலகிரி மாவட்டம், உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட போஜராஜன் வெற்றிபெற்றுள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இதில், உதகையில் பாஜக சாா்பில் போஜராஜன், காங்கிரஸ் சாா்பில் ராமசந்திரன், தவெக சாா்பில் இப்ராஹிம், நாதக சாா்பில் ரகுபதி உள்ளிட்ட 6 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை தொடங்கிய நிலையில், முதல் சுற்றில் பாஜக வேட்பாளா் போஜராஜன் முன்னிலை வகித்தாா். அடுத்தடுத்த சுற்றுகளில் இரண்டு, மூன்றாம் இடம் வகித்தாா். இறுதிச் சுற்றில் தவெக வேட்பாளரைவிட 976 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளா் போஜராஜன் வெற்றிபெற்றாா்.

இந்த தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.கணேஷ் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்

போஜராஜன் (பாஜக): 48,488

இப்ராஹிம் (தவெக) 47,512

ராமசந்திரன் (காங்கிரஸ்):45,658

ரகுபதி (நாதக): 4,641

நோட்டா: 1,525

வித்யாசம்: 976

வேட்பாளா்கள்:6

மொத்த வாக்குகள்: 1,88,826

பதிவான வாக்குகள்:104,870

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.