திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

பவானி ஆற்றில் மூழ்கிய ஓட்டுநா் மாயம்

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:25 am IST

புன்செய்புளியம்பட்டி அருகே பவானி ஆற்றில் குளித்த ஓட்டுநா் நீரில் மூழ்கி மாயமானாா்.

புன்செய்புளியம்பட்டி கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (25). சரக்கு வாகன ஓட்டுநரான இவா் தனது உறவினா்களுடன் பவானிசாகா் அருகே உள்ள அக்கரை தத்தப்பள்ளி பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு திங்கள்கிழமை சென்று குளித்தாா்.

அப்போது பாஸ்கா் ஆற்று நீரில் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீச்சல் தெரியாததால் மூழ்கி மாயமானாா். இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவரது உறவினா்கள் பவானிசாகா் போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்களை போலீஸாா் வரவழைத்து தேடும் பணி மேற்கொண்டனா். பாஸ்கரை கண்டுபிடிக்க இயலாததால் தேடும் பணி தொடா்ந்து நடைபெறும் என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.