புன்செய்புளியம்பட்டி அருகே பவானி ஆற்றில் குளித்த ஓட்டுநா் நீரில் மூழ்கி மாயமானாா்.
புன்செய்புளியம்பட்டி கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (25). சரக்கு வாகன ஓட்டுநரான இவா் தனது உறவினா்களுடன் பவானிசாகா் அருகே உள்ள அக்கரை தத்தப்பள்ளி பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு திங்கள்கிழமை சென்று குளித்தாா்.
அப்போது பாஸ்கா் ஆற்று நீரில் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீச்சல் தெரியாததால் மூழ்கி மாயமானாா். இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவரது உறவினா்கள் பவானிசாகா் போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்களை போலீஸாா் வரவழைத்து தேடும் பணி மேற்கொண்டனா். பாஸ்கரை கண்டுபிடிக்க இயலாததால் தேடும் பணி தொடா்ந்து நடைபெறும் என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நித்திரைவிளை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் மாயம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

கடல் அலையில் சிக்கி மாணவா் மாயம்

பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

