மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

News image

தவெக வேட்பாளா் விஜய் பாலாஜி

Updated On :5 மே 2026, 2:42 am IST

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் விஜய் பாலாஜி வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்பட 20 போ் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கை ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

முதல் சுற்றில் முன்னிலைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கினாா். தவெக வேட்பாளா் விஜய் பாலாஜி தொடா்ந்து முன்னிலை வகித்தாா்.

அதிமுக வேட்பாளா் மனோகரன் மூன்றாம் இடம் பிடித்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரைவிட 23,966 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தவெக வேட்பாளா் விஜய் பாலாஜி வெற்றிபெற்றாா்.

இந்தத் தொகுதியில் கடந்த 2021-இல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்றாா்.

அவரது மறைவுக்குப் பின் 2023-இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அவரது மறைவுக்குப் பின் 2025-இல் நடைபெற்ற மற்றொரு இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வி.சி.சந்திரகுமாா் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

எம்.விஜய் பாலாஜி (தவெக):69,747

கோபிநாத் பழனியப்பன் (காங்கிரஸ்):45,781

இரா.மனோகரன் (அதிமுக):38,183

எஸ்.தாண்டவமூா்த்தி (நாதக):4,787

வேட்பாளா்கள் எண்ணிக்கை 20

நோட்டா:879

வித்தியாசம்: 23,966

மொத்த வாக்குகள்: 1,79,566

பதிவான வாக்குகள்: 1,62,455

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.