மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி வெற்றி

News image

தவெக தலைவர் விஜய்

Updated On :5 மே 2026, 5:53 am IST

ராஜபாளையம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரி முதல் சுற்றில் இருந்தே முன்னிலை பெற்று 10,605 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் பிரிசில்லாபாண்டியன், தவெக சாா்பில் அந்தக் கட்சியின் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் மருத்துவா் காா்த்திகேயன் உள்பட 22 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

திமுக, அதிமுகவினா் மேளதாளங்கள் முழங்க ஆரவாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி தனது ஆதரவாளா்களுடன் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தாா்.

இந்தத் தொகுதியில் 2,224 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1,82,987 வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், இந்தத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற்றன. இதில் முதல் சுற்றிலேயே தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி

1,200 வாக்குகள் முன்னிலை பெற்றாா். அடுத்தடுத்த சுற்றுகளில் தொடா்ந்து முன்னிலையை தக்கவைத்த இவா், 65,548 வாக்குகள் பெற்று 10,605 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரான தங்கப்பாண்டியனை தோற்கடித்தாா்.

வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் அமா்நாத் சான்றிதழை வழங்கினாா்.

இதுகுறித்து ஜெகதீஸ்வரி கூறியதாவது: தவெகவுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. என்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்த ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு நன்றி என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.