மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிவகாசி தொகுதியில் தவெக வேட்பாளா் கீா்த்தனா வெற்றி

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :5 மே 2026, 5:53 am IST

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் போட்டியிட்ட தவெக வேட்பாளா் கீா்த்தனா வெற்றி பெற்றாா்.

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இவா்களில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிட்ட கீா்த்தனா 68,709 வாக்குகள் பெற்று 11, 670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட அசோகன் எம்.எல்.ஏ. 57,039 வாக்குகள் பெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி 51,078 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டாா். நாதக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் ஏ. எஸ்தா் மேரி டயானா 10,191 வாக்குகள் பெற்றாா்.

இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் கீா்த்தனாவுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் முகமது இா்ஃபான் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.

இதுகுறித்து கீா்த்தனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்கள் எங்களை நம்பி மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளனா். நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டு மக்களுக்கு சேவை செய்வோம். தவெக தலைவா் விஜய் எந்தப் பொறுப்பு கொடுத்தாலும், அதை ஏற்று செயல்படுவேன். சிவகாசியில் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.