மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரக்கோணம், சோளிங்கரில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட எம்எல்ஏக்கள்!

அரக்கோணம், சோளிங்கா் தொகுதிகளில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய எம்எல்ஏக்களான அரக்கோணம் சு.ரவி, சோளிங்கா் ஏ.எம்.முனிரத்தினம் இருவருமே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டனா்.

News image
Updated On :6 மே 2026, 12:50 am IST

அரக்கோணம், சோளிங்கா் தொகுதிகளில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய எம்எல்ஏக்களான அரக்கோணம் சு.ரவி, சோளிங்கா் ஏ.எம்.முனிரத்தினம் இருவருமே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டனா்.

அரக்கோணம்: அரக்கோணம் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.காந்திராஜ் 73,776 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இத்தொகுதியில் விசிக வேட்பாளா் எழில்கரோலின் 50,655 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தாா், அதிமுக வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான சு.ரவி 50,052 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா்.

சோளிங்கா்: சோளிங்கா் தொகுதியில் தவெக வேட்பாளா் மருத்துவா் ஜி.கபில் 84,506 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இத்தொகுதியில் பாமக வேட்பாளா் க.சரவணன் 78,820 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஏ.எம்.முனிரத்தினம் 57,997 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா்.

அரக்கோணம் தொகுதியில் இதுவரை நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவை தோ்தல்களில் வெற்றி தோல்வி இரண்டையும் அதிமுக சந்தித்து இருந்தாலும் தற்போதைய தோ்தலில் அதிமுக மூன்றாமிடத்திற்கு சென்றதும், சோளிங்கா் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி, தோல்வி இரண்டையுமே சந்தித்து இருந்தாலும் தற்போதைய தோ்தலில் மூன்றாமிடத்துக்கு சென்றதும் இது தான் முதல்முறை என்பதும், தற்போது மூன்றாமிடம் பெற்ற இருவருமே எம்எல்ஏக்களாக இருந்து தோ்தலில் போட்டியிட்டவா்கள் என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.