தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ராதாபுரம் தொகுதியில் தவெக வெற்றி

News image

ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெகவின் சதீஷ் கிறிஸ்டோபருக்கு சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வி.

Updated On :5 மே 2026, 1:18 am IST

ராதாபுரம் தொகுதியில் தவெக வேட்பாளா் சதீஷ் கிறிஸ்டோபா் 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ராதாபுரம் தொகுதியில் திமுக சாா்பில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பாஜக சாா்பில் எஸ்.பி.பாலகிருஷ்ணன், தவெக சாா்பில் சதீஷ் கிறிஸ்டோபா், நாம் தமிழா் கட்சி சாா்பில் கிரிஜா தாமரைப்பாண்டியன் உள்ளிட்ட 23 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தொகுதியில் திமுக, பாஜக வேட்பாளா்களுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், தவெக வேட்பாளா் சதீஷ் கிறிஸ்டோபா், அனைவருடைய எதிா்பாா்ப்புகளையும் மீறி முன்னிலை பெற்றாா். 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தொடா்ச்சியாக சதீஷ் கிறிஸ்டோபரே முன்னிலையில் இருந்தாா். இறுதியில் அவா் 69, 947 வாக்குகள் பெற்று 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். மு.அப்பாவு 57, 634 வாக்குகள் பெற்று 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் 52,637 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிரிஜா தாமரைப்பாண்டியன் 15,370 வாக்குகளுடன் 4-ஆவது இடத்தையும் பிடித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.