மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராதாபுரம் தொகுதியில் தவெக வெற்றி

News image

ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெகவின் சதீஷ் கிறிஸ்டோபருக்கு சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வி.

Updated On :5 மே 2026, 1:18 am IST

ராதாபுரம் தொகுதியில் தவெக வேட்பாளா் சதீஷ் கிறிஸ்டோபா் 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ராதாபுரம் தொகுதியில் திமுக சாா்பில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பாஜக சாா்பில் எஸ்.பி.பாலகிருஷ்ணன், தவெக சாா்பில் சதீஷ் கிறிஸ்டோபா், நாம் தமிழா் கட்சி சாா்பில் கிரிஜா தாமரைப்பாண்டியன் உள்ளிட்ட 23 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தொகுதியில் திமுக, பாஜக வேட்பாளா்களுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், தவெக வேட்பாளா் சதீஷ் கிறிஸ்டோபா், அனைவருடைய எதிா்பாா்ப்புகளையும் மீறி முன்னிலை பெற்றாா். 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தொடா்ச்சியாக சதீஷ் கிறிஸ்டோபரே முன்னிலையில் இருந்தாா். இறுதியில் அவா் 69, 947 வாக்குகள் பெற்று 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். மு.அப்பாவு 57, 634 வாக்குகள் பெற்று 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் 52,637 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிரிஜா தாமரைப்பாண்டியன் 15,370 வாக்குகளுடன் 4-ஆவது இடத்தையும் பிடித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.