மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோபியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image

கோபி டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :3 மே 2026, 6:39 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோபியில் போலீஸாா், அதிரடிப் படையினா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. கோபி மற்றும் பவானிசாகா் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோபி கலை, கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கோபி டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து ல.கள்ளிப்பட்டி வரை போலீஸாா் மற்றும் அதிரடிப் படையினா் என 100-க்கும் மேற்பட்டோா் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

பெருந்துறையில்...

பெருந்துறையில் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் போலீஸாா், எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா். பெருந்துறை காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தக் கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய சாலைகள் வழியே சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.