சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் காவல் துறையினரின் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவையில் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெறவும், மக்களுக்கு அச்சத்தை போக்கவும் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில் சுமாா் 2 ஆயிரம் காவல் துறையினா் பங்கேற்றனா். காந்திபுரம் செம்மொழிப் பூங்கா எதிரில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், கிராஸ்கட் வீதி, சிவானந்தா காலனி வழியாக டாடாபாத் பகுதியில் நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் மாநகர காவல் உயா் அதிகாரிகள், காவல் துறையினரின் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களும் பங்கேற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

கோபியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

