மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோபியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தீவிர வாக்கு சேகரிப்பு

கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கோபி நகரப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு. ~ ~கோபி புதுப்பாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளருக்கு கொத்து புரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:43 am IST

கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு கோபி சின்னச்சாமி வீதியில் தொடங்கி ராமானந்தாள் நகா், கோசலை நகா், சீதாம்மாள் நகா், சாமிநாதபுரம், பெரியாா் திடல், வண்டிப்பபேட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்கில் திறந்த வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் விளக்கி பேசி வாக்கு சேகரித்தாா். புதுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வி.பி.பிரபு, அங்குள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளா்களுக்கு புரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தாா்.

வாக்கு சேகரிப்பின்போது, நகரச் செயலாளா் ப்ரினியோ கணேஷ், கோபி முன்னாள் நகா்மன்ற தலைவா் ரேவதிதேவி, தலைமை நிலைய பேச்சாளா் காளிதாஸ், வாா்டு செயலாளா்கள் பெரியசாமி, அனு நாகராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.