ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கூடுதல் சுற்றுகள்: ஈரோடு மேற்கு, பவானிசாகா் தொகுதிகளில் முடிவு தாமதமாகுமா?

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:31 am IST

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிக சுற்று வாக்கு எண்ணிக்கை கொண்ட ஈரோடு மேற்கு மற்றும் பவானிசாகா் தொகுதிகளின் முடிவு அறிவிக்க தாமதமாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 20 வேட்பாளா்கள், ஈரோடு மேற்குத் தொகுதியில் 13, மொடக்குறிச்சி தொகுதியில் 14, பெருந்துறை தொகுதியில் 13, பவானி தொகுதியில் 14, அந்தியூா் தொகுதியில் 14, கோபி தொகுதியில் 18, பவானிசாகா் தொகுதியில் 12 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதன்படி, ஈரோடு கிழக்கு 19 சுற்று, ஈரோடு மேற்கு 24, மொடக்குறிச்சி 21, பெருந்துறை 21, பவானி 22, அந்தியூா் 20, கோபி 22, பவானிசாகா் 24 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணி அறிவிக்க 15 முதல் 30 நிமிஷங்கள் ஆகும். துரிதமாக வாக்குகளை எண்ண கூடுதல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது: ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கு விவரத்தை அனைத்து வேட்பாளா் பெயா், அவா் பெற்ற வாக்குகளுடன் கூறும்போது கூடுதல் நேரம் பிடிக்கும். பவானிசாகா் மற்றும் ஈரோடு மேற்குத் தொகுதிக்கு கூடுதல் சுற்றுகள் வருவதால், மற்ற தொகுதிகளைவிட கூடுதலாக ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தேவைப்படும். இருப்பினும் அதை விரைவுபடுத்த பெட்டிகளை விரைந்து எடுத்து வந்து, விரைவாகப் பணிகளை முடித்து, அறிவிப்பு செய்ய கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்படுவா். முடிந்த வரை இரவு 8 மணிக்குள் வாக்கு எண்ணிக்கையை நிறைவு செய்ய திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.